/ செய்திகள் / இந்தியாவின் பாதுகாப்பை உறுதி செய்தார் பிரதமர் மோடி: அமித்ஷா பேச்சு

இந்தியாவின் பாதுகாப்பை உறுதி செய்தார் பிரதமர் மோடி: அமித்ஷா பேச்சு

புதுச்சேரி: இந்தியாவின் செழிப்பையும், பாதுகாப்பையும் பிரதமர் மோடி உறுதி செய்தார். வரும் சட்டசபை தேர்தலில் தேஜ கூட்டணி வெற்றி பெறும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசினார்.புதுச்சேரி மாநிலம், காரைக்காலில் பாஜ பொதுக்கூட்டத்தில் அமித்ஷா பேசியதாவது: திருநள்ளாறு சனீஸ்வரன், பத்ரகாளியம்மனையும் வணங்கி உரையைத் தொடங்குகிறேன். உலகின் மிக தொன்மையான தமிழ் மொழியில் உரையாற்ற முடியவில்லை என்பதற்காக மன்னிப்பு கேட்கிறேன். இரண்டு நோக்கங்களுக்காக இங்கு வந்துள்ளேன். பிரதமர் மோடி, ரங்கசாமி தலைமையில் இத்தனை ஆண்டு புதுச்சேரியில் என்ன நடந்தது என்று சொல்ல வந்துள்ளேன். இண்டி கூட்டணியின் தீய நோக்கத்தை கிழித்து எறிய நான் இங்கு வந்துள்ளேன். புதுச்சேரியில் ஊழலை தேஜ கூட்டணி அரசு முடிவுக்கு கொண்டு வந்துள்ளது. தேஜ கூட்டணி அரசு வேண்டுமா? வேண்டாமா? மக்கள் முடிவு செய்வார்கள்.தீய சக்திபுதுச்சேரியில் அரசியல் நிலைத்தன்மை, ஸ்த்திரத்தன்மையை உருவாக்கி இருக்கிறோம். 2019ல் புல்வாமா தாக்குதலில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் உயிரிழந்தனர். நாட்டை காத்த வீரர்களுக்கு இன்று அஞ்சலி செலுத்துகிறேன். காங்கிரஸ் ஆட்சியில் தினந்தோறும் பயங்கரவாத தாக்குதல் நடந்தது. அன்றாட தாக்குதலை காங்கிரஸ் வாடிக்கையாக மாற்றி இருந்தது. இது குறித்து வாய் திறக்க மாட்டார்கள். காங்கிரஸ் ஆட்சியில் பயங்கரவாதிகள் ஆட்டம் போட்டனர். பிரதமர் மோடி பயங்கரவாதிகளை ஒடுக்கினார். எந்த தீய சக்தியும் நாட்டின் மீது கண் வைக்க முடியாது.பாடம்பாகிஸ்தானுக்கு பிரதமர் மோடி பாடம் கற்பித்தார். மோடி ஆட்சிக்கு வந்த பிறகு முதன் முதலாக பயங்கரவாதிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. பயங்கரவாதிகள் ஊடுருவல் குறித்து காங்கிரஸ் கட்சியினர் யாரும் வாய் திறக்கவில்லை. காங்கிரஸ் ஆட்சியில் ஒவ்வொரு நாளும் பாகிஸ்தானில் இருந்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்துவார்கள். இந்தியாவின் செழிப்பையும், பாதுகாப்பையும் பிரதமர் மோடி உறுதி செய்தார். நாட்டுக்கு வலுவான பாதுகாப்பை பிரதமர் மோடி அளித்துள்ளார். துல்லிய தாக்குதல் மூலம் பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுத்துள்ளோம். ஊழல்ஆப்பரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கை வெற்றிகரமாக நடத்தி பாகிஸ்தான் தாக்குதலுக்கு மோடி முற்றுப்புள்ளி வைத்துள்ளார். புதுச்சேரியில் தேஜ கூட்டணி, ரங்கசாமி, பிரதமர் மோடி ஆகியோர் மீது மக்கள் நம்பிக்கை வைத்துள்ளனர். 2021ல் நடந்த புதுச்சேரி தேர்தலில் மக்கள் நமக்கு 44 சதவீத ஆதரவை அளித்துள்ளனர். வரும் தேர்தலில் 60 சதவீத ஓட்டுக்களை பெற்று 24 இடங்களுக்கும் மேல் தேஜ கூட்டணி வெற்றி பெறும். மோசமான காங்கிரஸ் ஆட்சியாளர் நாராயணசாமி அரசு. அவர்களது ஆட்சியில் ஊழல் நிரம்பி இருந்தது. 5 ஆண்டுகளில்நாராயணசாமி ஆட்சியில் ஊழல் மட்டுமல்லாமல் நிர்வாக சீர்கேடும் இருந்தது. தற்போது சிறப்பான ஆட்சியை முதல்வர் ரங்கசாமி அளித்து வருகிறார். புதுச்சேரியில் 5 ஆண்டுகள் சட்டம் ஒழுங்கை சீர் செய்துள்ளோம். வளர்ச்சி பயணத்தை தொடர வேண்டும். அடுத்த ஐந்து ஆண்டுகளில் புதுச்சேரி மேலும் வளர்ச்சி பெறும். புதுச்சேரியை வளர்ச்சி அடைந்த மாநிலமாக மாற்றுவோம். அக்கறை3 துறைகளில் கவனம் செலுத்தி புதுச்சேரியை மேம்படுத்த உள்ளோம். மீனவர்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்த உள்ளோம். புதுச்சேரி மீனவர்கள் நலனில் கவனம் செலுத்துவோம். இளைஞர்களை மனதில் கொண்டு புதுச்சேரியை தகவல் தொழில்நுட்ப மையமாக மாற்ற வேண்டும். இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தி தரும் பணியில் ஈடுபடுவோம். ஐடி, ஏஐ புரட்சியில் புதுச்சேரி மையமாக வேண்டும். தமிழ், தமிழர்கள் மீது பிரதமர் மோடி அக்கறை கொண்டுள்ளார்.புத்துயிர் திருவள்ளுவர் பெயரில் ஊக்கத்தொகை திட்டத்தை அறிவிப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். ராஜீவ் குடும்பத்தின் ஏடிஎம் ஆக புதுச்சேரியை காங்கிரஸ் ஆக்கி இருந்தது. மலேசியாவில் தமிழ் மொழிக்கு சிறுபான்மை மொழி என்ற அந்தஸ்து கிடைத்துள்ளது. புதுச்சேரியில் கடந்த கால ஆட்சியில் ஒரு தொழில் கூட புதிதாக துவங்கப்படவில்லை. தற்போது இங்கு தயாரிக்கப்படும் லேப் டாப்கள் உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. ஜவுளி துறைக்கு புத்துயிர் ஊட்டியுள்ளோம்.வர்த்தக ஒப்பந்தம்பொய் பேசுவதையே தொழிலாக கொண்டுள்ளார் ராகுல். பிரதமர் மோடி மேற்கொண்டுள்ள வர்த்தக ஒப்பந்தங்களால் நிறைய பலன்கள் கிடைக்கும். வர்த்தக ஒப்பந்தங்களில், விவசாயிகள், மீனவர்கள் மற்றும் சிறு, குறு தொழில் நிறுவனங்களின் 100 சதவீத பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளன. விவசாயிகள், மீனவர்களை ராகுல் தவறாக வழிநடத்த முயற்சி செய்கிறார். இவ்வாறு அமித்ஷா பேசினார். சுவர் விளம்பரம் காரைக்காலில் பாஜவின் சுவர் விளம்பர பிரசாரத்தை தொடங்கி வைத்த அமித்ஷா, பாஜவின் சின்னமான தாமரையை சுவரில் வரைந்து வண்ணம் தீட்டினார். தினமலர் நேரலைகாரைக்காலில் நடந்த பாஜ பொதுக்கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்து கொண்டு பேசினார். இந்த நிகழ்ச்சி தினமலர் யுடியூப், இணையதளம் உள்ளிட்டவற்றில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது.வீடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 15 )

இந்து
பிப் 15, 2026 12:39

மொட்டை தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போட தனி விவேகம் தேவை.


கனோஜ் ஆங்ரே
பிப் 14, 2026 19:17

வடிவேல் காமெடி ... “பாவம் அவரே குழம்பிட்டாரு”...ங்ற மாதிரி... “நாராயணசாமி”.... “ரங்கசாமி”... டங் ஸ்லிப் ஆச்சே...? உண்மையா


guna
பிப் 14, 2026 20:31

கானோஜ் அது வேற ஒண்ணும் இல்ல நீ ஐந்து ஆயிரம் வாங்கிட்டார்ல..அதனால ஒரு வாரம் சவுண்ட் அதிகமா இருக்கும்


N Sasikumar Yadhav
பிப் 14, 2026 17:45

தேசம் பாதுகாப்பாக இருக்கிறது


Rathna
பிப் 14, 2026 16:41

தினமும் குண்டு வெடித்தது என்ற நிலையில் இருந்து நாட்டு பாதுகாப்பு அதிகரித்து உள்ளது என்பது மறுக்கமுடியாத உண்மை. ஆனால் பங்களாதேஷ் பார்டெரை பாதுகாப்பது மிகவும் அவசியம்.


vivek
பிப் 14, 2026 16:21

பார்டர் பாதுகாப்பாக இருக்கிறது என்றால் ராணுவ ஜெனரல் நரவானே அவர்களின் புத்தகத்தை திறந்தால் நடுங்கி ஓடுவது ஏன்?


Chinnappan Arulappan
பிப் 14, 2026 17:21

எங்கப்பன் குதிருக்குள் இல்லை அதான்


Nathansamwi
பிப் 14, 2026 15:57

இன்னும் எவ்ளோ காலத்துக்கு ஆபரேஷன் சிந்தூர் சொல்லியே ஓட்டு கேப்பீங்களோ ?


vivek
பிப் 14, 2026 16:42

நாதன் தினமும் கூனி குறுகி இருநூறு வாங்கும்போது இனிக்குது


Chinnappan Arulappan
பிப் 14, 2026 17:23

அடுத்த செந்தூர் சிந்தூர் வரை வேறு வழி??


பாலாஜி
பிப் 14, 2026 14:59

அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்தியாவின் பாதுகாப்பாளர் என நரேந்திரமோடி ஆபரேஷன் சிந்தூருக்குப்பிறகு முடிவு செய்துவிட்டார் அமித்ஷா.


vivek
பிப் 14, 2026 15:41

திராவிட சொம்பு பாலாஜி..உனக்கு திமுக மட்டுமே உதவும்


ஆகுயர்த்தோன்
பிப் 14, 2026 14:20

பாண்டிச்சேரி யில் இனி குடி கிடையாது என்று வீரமா ஒரு வார்த்தை சொல்லுங்களேன் , மொத பெண்கள் வோட்டு உங்களுக்கு தான் அமோக வெற்றி தான் போங்கள்


vivek
பிப் 14, 2026 14:53

ஆகூர் நீ முட்டு குடுக்கும் அறிவாலயம் இதை சொல்லலாமே...உன் சந்ததியாவது பிழைக்கும்


Ravichandran Kannan
பிப் 14, 2026 14:16

ஏமாத்த பார்க்கும் வஞ்சகரேய். என் இடம் ஆன்லைன் டியூஷன் சேறு