/ செய்திகள் /  மாம்பழம் பிரச்னைக்கு நல்ல தீர்வு: மணி நம்பிக்கை

 மாம்பழம் பிரச்னைக்கு நல்ல தீர்வு: மணி நம்பிக்கை

திண்டிவனம்: பா.ம.க., கவுரவ தலைவர் ஜி.கே.மணி அளித்த பேட்டி: ராமதாஸ் தலைமையில் பா.ம.க.,விற்கு அங்கீகாரம் கிடைப்பதே முக்கியம். மாம்பழ சின்னம் பிரச்னைக்கு நீதிமன்றத்தின் மூலம் நல்ல முடிவு வரும் என்று ராமதாஸ் நம்புகிறார். தமிழக தேர்தல் அரசியலில் ராமதாசை யாராலும் தனிமைப்படுத்த முடியாது. கூட்டணி குறித்து இன்னும் ஓரிரு நாளில் பா.ம.க., தலைமை அறிவிக்கும். இவ்வாறு ஜி.கே.மணி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !