/ செய்திகள் /  அனைவருக்கும் கறிவிருந்து; சுந்தர்.சி உறுதி

 அனைவருக்கும் கறிவிருந்து; சுந்தர்.சி உறுதி

மதுரை மத்திய தொகுதியில் வேட்பாளர் அறிமுக கூட்டம் நடந்தது. அதில், தே.ஜ., கூட்டணியில் புதிய நீதிக்கட்சி சார்பில் இரட்டை இலை சின்னத்தில் சினிமா இயக்குநர் சுந்தர்.சி போட்டியிடுகிறார். அவர் பேசியதாவது: நான் இந்த தொகுதியில் போட்டியிடுவதாக அறிவித்ததும், இந்தத் தொகுதியிலா என்று கூறி எதிர்ப்பு கிளம்பியது. 'அவரை' எதிர்த்து போட்டியிட முடியாது என்றனர். அவர் என்ன எம்.ஜி.ஆரா? அவர் பி.டி.ஆர்., தான். தி.மு.க.,வினரிடம் பில்டிங் மட்டும்தான் ஸ்ட்ராங். பேஸ்மென்ட் வீக்காகத்தான் இருக்கு. என்னை வெளியூர்காரன் என்கின்றனர். உள்ளூரில் இருந்தவர்கள் என்ன சாதித்தனர். இந்தப் பகுதி மக்கள், தங்கள் எம்.எல்.ஏ.,வாக உள்ள அமைச்சர் தியாகராஜனை பார்த்ததே இல்லை என்கின்றனர். நான் வென்றால், மதுரையில் கோவில் அருகே உள்ள கறிக்கடைகளை மூடுவேன் என்று கூறியதாக பொய் பிரசாரம் செய்கின்றனர். நான், வாரத்தில் ஆறு நாள் கறி சோறு சாப்பிடுபவன். நான் வெற்றி பெற்றால் மக்களுக்கு கறி விருந்து அளிப்பேன். இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

mainapproach
ஏப் 08, 2026 19:10

Mutton Biryani or kaka Biryani


DHURANDHAR
ஏப் 08, 2026 19:07

அப்ப கறிசோறு சாப்பிட மட்டும்தான் மதுரை வருவான் போல... மிகவும் மட்டமான பேச்சு... கோவில் அருகே உள்ள கறிக்கடைகளை மூட வைப்பேன் என்று சொல்லியிருந்தால் கூட பாராட்டியிருக்கலாம்...


M Ramachandran
ஏப் 08, 2026 17:14

அவசியம் தானா சுந்தர் சி அவர்களெ. இது என்ன முதலீடு என்று நினைத்தீர்களா? ஜெயித்தால் தேத்தலாம் தோற்றால் முதலுக்கே மோசமாகி விடும்.


நாரணம்
ஏப் 08, 2026 15:22

இவர் வெற்றி பெறு வாய்ப்பே இல்லை


Raj
ஏப் 08, 2026 12:54

சாப்பாட்டுக்கு சாகிற நிலைமைக்கு மக்களை இந்த அரசாங்கம் கொண்டுவந்து விட்டது.


m.arunachalam
ஏப் 08, 2026 10:24

கறிவிருந்து என்ற அளவில் மக்கள் உள்ளதாக நினைப்பது சரியா ?.