தெக்கும் வடக்கும் அகக்கண் திறக்கும்: கமல்

"தெக்கும் வடக்கும் அகக்கண் திறக்கும்" என, மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தனது சமூகவலைதளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

லோக்சபா தேர்தலில் இண்டியா கூட்டணிக்கு மக்கள் நீதி மய்யம் கட்சி ஆதரவு தெரிவித்தது. அக்கட்சிக்கு அடுத்த ஆண்டு காலியாக உள்ள ஒரு ராஜ்யபா சீட்டை தி.மு.க., ஒதுக்கியது.

இதையடுத்து, மாநிலம் முழுவதும் இண்டியா கூட்டணிக் கட்சிகளை ஆதரித்து கமல் பிரசாரம் செய்து வந்தார். இன்று மாலை 6 மணியுடன் பிரசாரம் முடிவடைய உள்ள நிலையில், 'நாளை நமதே' என்ற தலைப்பில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை கமல் வெளியிட்டுள்ளார்.

அதில் கூறப்பட்டுள்ளதாவது:

காலை பசியாறுகையில் கனைகுரல் பல்லியொன்று கட்டியம் கூறக் கேட்டேன் செக்கச் சிவந்து கிழக்கு வெளுக்கதெக்கும் வடக்கும் அகக்கண் திறக்கும்தேடி வரும் நாளை நமதே என்று

இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.


jayvee - chennai, இந்தியா
18-ஏப்-2024 12:02 Report Abuse
jayvee இதை ஒரு லொள்ளைக்கண்ணன் சொல்வது வேடிக்கையாக இருக்கிறது
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் விறுவிறு

தினமலர் முதல் பக்கம்