நகர செயலருக்கு அடி: நாகூர் தி.மு.க.,வில் கூத்து

நாகூரில், இந்திய கம்யூ., வேட்பாளர் பிரசாரத்தின்போது, உட்கட்சி பூசலால், தி.மு.க., நகர செயலரை, தி.மு.க.,வினரே தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

நாகை, அடுத்த நாகூர் பகுதியில், தி.மு.க., நகர செயலர் செந்தில் தலைமையில், நேற்று முன்தினம் மாலை, இந்திய கம்யூ., வேட்பாளர் செல்வராஜ் ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டிருந்தார்.

தெற்கு தெரு பகுதியில் வந்தபோது, தி.மு.க., சிறுபான்மை பிரிவு மாவட்ட துணை அமைப்பாளர் ஹாஜா அசாருதீன், முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் பகுதிக்கு பிரசார வாகனத்தை திருப்புமாறு கூறியுள்ளார்.

வேட்பாளருடன் வாகனத்தில் இருந்த தி.மு.க., நகர செயலர் செந்தில், அதற்கு மறுப்பு தெரிவித்ததால், இரு தரப்புக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரமடைந்த ஹாஜா அசாருதீன் ஆதரவாளர்கள், வேட்பாளருடன் வாகனத்தில் நின்றுகொண்டிருந்த செந்திலை தாக்கினர். உடனிருந்த கூட்டணி கட்சியினர் இருதரப்பையும் சமாதானப்படுத்தி, பிரசாரத்தை தொடர்ந்தனர்.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் விறுவிறு

தினமலர் முதல் பக்கம்