எஸ்.டி.பி.ஐ., வேட்பாளர் முபாரக்குக்கு எதிர்ப்பு

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே கோடாங்கிநாயக்கன்பட்டியில், அ.தி.மு.க., கூட்டணி எஸ்.டி.பி.ஐ., வேட்பாளர் முகமது முபாரக், பிரசாரம் மேற்கொள்ள இருப்பதாக தகவல் வெளியானது.

அதையடுத்து அப்பகுதி முஸ்லிம்கள், மசூதியில் கூடி, எஸ்.டி.பி.ஐ., வேட்பாளர் ஓட்டு சேகரிக்கவரக்கூடாது என முடிவு செய்தனர்.

இதை தொடர்ந்து, ஊர் முழுவதும் கருப்புக்கொடி கட்டப்பட்டு, முகமது முபாரக் தேர்தல் பிரசாரம் செய்ய எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதை அறிந்த வேட்பாளர் உள்ளிட்ட அ.தி.மு.க.,வினர், எஸ்.டி.பி.ஐ., கட்சியினர் கோடாங்கிநாயக்கன்பட்டி செல்லாமல் திரும்பினர்.

ஜமாத் நிர்வாகிகள் கூறியதாவது:

அருகில் உள்ள புதுாரும் முஸ்லிம்கள் ஊர் தான். இரு ஊர் முஸ்லிம்களுக்கும் இடையே ஏற்பட்ட சிறு பிரச்னையை பெரிதாக்கி, பிளவை ஏற்படுத்தி அரசியல் ஆதாயம் தேட, முகமது முபாரக் முயற்சித்தார். எனவே, அவருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக ஊர்முழுவதும் கருப்புக்கொடி கட்டினோம்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் விறுவிறு

தினமலர் முதல் பக்கம்