'இனிமேல் என்னால் பிரசாரம் செய்ய முடியாது!'

'டாக்டர்களின் அறிவுறுத்தலின்படி, என்னால் இனி தேர்தல் பிரசாரம் செய்ய முடியாது' என, பா.ஜ., தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவுக்கு, நடிகை குஷ்பு கடிதம் எழுதியுள்ளார்.

நடிகை குஷ்பு, பா.ஜ.,வில் தேசிய செயற்குழு சிறப்பு அழைப்பாளராகவும், தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராகவும் உள்ளார். தமிழகத்தில் பா.ஜ., வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொள்ள, 40 பேர் நட்சத்திர பேச்சாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். அதில், குஷ்புவும் ஒருவர்.

அதன்படி, வேலுார், மத்திய சென்னை, தென் சென்னை உள்ளிட்ட தொகுதிகளில் குஷ்பு பிரசாரம் மேற்கொண்டார்.

இந்நிலையில், 'டாக்டர்களின் அறிவுறுத்தலின்படி, என்னால் இனி தேர்தல் பிரசாரம் செய்ய முடியாது' என, ஜே.பி.நட்டாவுக்கு, குஷ்பு நேற்று கடிதம் எழுதியுள்ளார்.

கடிதம் வருமாறு:

கடந்த, 2019ல் நிகழ்ந்த விபத்தில் எனக்கு எலும்பு முறிவு ஏற்பட்டது. இதற்காக, ஐந்து ஆண்டுகளாக சிகிச்சை பெற்று வருகிறேன். பிரசாரத்தில் ஈடுபட வேண்டாம் என, டாக்டர்கள் அறிவுறுத்தினர். அதையும் மீறி பா.ஜ.,வுக்கு என்னை அர்ப்பணித்துக் கொண்டு, பிரதமர் மோடியின் பாதையை பின்பற்றி, பிரசாரம் மேற்கொண்டு வந்தேன்.

தற்போது, என் உடல்நிலை பாதிக்கப்பட்டதால், தீவிர சிகிச்சை எடுப்பதற்காக, பிரசாரம் மேற்கொள்ள கூடாது என்று டாக்டர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இதற்கு மேல், என்னால் பிரசாரம் மேற்கொள்ள முடியாது என்பதை கனத்த இதயத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

சமூக வலைதளங்களில் பா.ஜ.,வுக்காக தொடர்ந்து பிரசாரம் செய்வேன். மோடி மூன்றாவது முறையாக பிரதமராக பொறுப்பேற்க இருப்பதை காண விரும்புகிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் விறுவிறு

தினமலர் முதல் பக்கம்