உங்களுக்கு என்ன பேர் வைக்கலாம்: உதயநிதியை கலாய்த்த சரத்

''பிரதமர் மோடியை 29 பைசா என பெயர் வைக்கிறார் உதயநிதி. உங்களை 30,000 கோடி என்று பெயர் வைக்கலாமா'' என நடிகர் சரத்குமார் பேசினார்.

விருதுநகர் தொகுதயில் போட்டியிடும் ராதிகாவை ஆதரித்து சரத்குமார் பேசியதாவது:

பிரதமர் மோடியை 29 பைசா என பெயர் வைக்கிறார் உதயநிதி. உங்களை 30,000 கோடி என்று பெயர் வைக்கலாமா.கச்சத்தீவை தந்து விட்டு வேடிக்கை பார்த்தவர்கள் தி.மு.க.,வினர்.

அப்போது காங்கிரஸ் ஆட்சியில் இருந்த சில முதல்வர்கள், 'இலங்கைக்கு கச்சத்தீவை தரக்கூடாது' என முறையிட்டனர். கருணாநிதி துாங்கி கொண்டு இருந்தாரா?

கடந்த 10 ஆண்டு கால பா.ஜ., ஆட்சியில் என்ன செய்தனர் என சிலர் கேட்கிறார்கள், நீங்கள் என்ன செய்து கொண்டு இருந்தீர்கள்.இலங்கை கடற்படையிடம் சிக்கிய தமிழக மீனவர்களை பாதுகாப்பாக மீட்டவர் பிரதமர் மோடி.அவரை பற்றி பேச தி.மு.க.,வுக்கு அருகதையே கிடையாது. இன்று மீனவர்கள் சந்திக்கும் கஷ்டத்துக்கு தி.மு.க., தான் காரணம் என உறுதியாக சொல்ல முடியும். கச்சத்தீவை மீட்டு எடுப்பது மோடியால் மட்டுமே சாத்தியமாகும்.

இவ்வாறு அவர் பேசினார்


Milirvan - AKL, நியூ சிலாந்து
02-ஏப்-2024 05:51 Report Abuse
Milirvan 30 ஆ கோடி ஆ போட்டுக்கிட்டவர் என்றும் சொல்லலாமே..
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் விறுவிறு

தினமலர் முதல் பக்கம்