தேர்தல் பத்திரங்கள்: புதிய தரவுகள் வெளியீடு

தேர்தல் பத்திரங்கள் குறித்த புதிய தரவுகளை தேர்தல் கமிஷன் வெளியிட்டுள்ளது.

தேர்தல் பத்திரங்கள் குறித்த விவரங்களை எஸ்.பி.ஐ., வங்கி தேர்தல் கமிஷனிடம் வழங்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து எஸ்.பி.ஐ., வங்கி கடந்த 2019 முதல் நடப்பாண்டு பிப்., வரையிலான பத்திர விவரங்களை கடந்த வாரம் தேர்தல் கமிஷனிடம் சமர்பித்தது.

இதன் விவரங்களை கடந்த 15ம் தேதி தேர்தல் கமிஷன் இணையதளத்தில் வெளியிட்டது.இந்நிலையில், தேர்தல் பத்திரங்கள் குறித்த புதிய தரவுகளை தேர்தல் கமிஷன் இன்று வெளியிட்டுள்ளது.

இது குறித்து தேர்தல் கமிஷன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:

உச்சநீதிமன்ற பதிவகத்தில் இருந்து சீல்வைக்கப்பட்ட உரையில் தேர்தல் பத்திரங்கள் குறித்த விவரங்களை டிஜிட்டல் சாதனங்ளிலும், காகிதங்களாகவும் பெறப்பட்டுள்ளது.

உச்சநீதிமன்றத்தில் இருந்து பெறப்பட்ட டிஜிட்டல் தரவுகளை தேர்தல் கமிஷன் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் விறுவிறு

தினமலர் முதல் பக்கம்