பஞ்சாபில் 13 தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டும்: கெஜ்ரிவால்

"பஞ்சாபில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் ஆம் ஆத்மி வெல்ல வேண்டும்" என, அக்கட்சியின் தலைவர் அரவிந்த கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்

பஞ்சாப்பில் லோக்சபா தேர்தல் பிரசாரத்தை ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் துவக்கியுள்ளார்.

அப்போது அவர் பேசியதாவது:

பஞ்சாபில் வசிக்கும் மக்களின் வாழ்க்கை செழிப்பாக மாற வேண்டுமெனில் 13 லோக்சபா தொகுதிகளிலும் ஆம் ஆத்மி வெற்றி பெற வேண்டும். பஞ்சாபிற்கு சேர வேண்டிய 8,000 கோடி ரூபாய் நிதியை மோடி தலைமையிலான மத்திய அரசு நிறுத்தி வைத்துள்ளது.

இந்த பணத்தை மத்திய அரசு வழங்கி இருந்தால் பள்ளிகள், மருத்துவமனைகளுக்கு அந்த நிதி பயனளித்து இருக்கும். ஆனால் அவர்கள் அதை செய்யவில்லை. பா.ஜ., எம்.எல்.ஏக்கள் தினமும் எங்களை அணுகி, எங்கள் ஆட்சியை கவிழ்க்க சதி திட்டம் தீட்டி வருகின்றனர்.

இதே எண்ணத்தில் பஞ்சாப் அரசையும் கவிழ்க்க சதி திட்டம் நடந்து வருகிறது. அரசியல் காரணங்களுக்காக பஞ்சாப் முதல்வர் பகவந்த் மானை மத்திய அரசும், பஞ்சாப் கவர்னரும், தொடர்ந்து அச்சுறுத்தி வருகின்றனர்.

வரும் லோக்சபா தேர்தலில் பஞ்சாபில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற மக்கள் ஆதரவு தர வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் விறுவிறு

தினமலர் முதல் பக்கம்