அதிகாரிகள் அனுமதி மறுப்பால் த.வெ.க.,வுக்கு தொடரும் சிக்கல்
சென்னை: த.வெ.க., வேட்பாளர் பட்டியல் வெளியிடுவதும், அக்கட்சி தலைவர் விஜய் சுற்றுப்பயணமும், தேர்தல் கமிஷன் அனுமதி கிடைக்காததால் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
த.வெ.க., தலைவர் விஜய், கரூரில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் பங்கேற்ற கூட்டத்தில் நெரிசலில் சிக்கி, 41 பேர் பலியாகினர். இதன்பின், விஜயின் சுற்றுப்பயணத்துக்கு, கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.
அதேபோல், 5,000 பேருக்கு மேல் பங்கேற்கும் கட்சி கூட்டங்களுக்கு, அரசின் சார்பில், புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்கப்பட்டன. அனைத்து கட்சிகளும் ஒப்புதல் அளித்தபோதிலும், இந்த வழிகாட்டு நெறிமு றைகளை, த.வெ.க., மட்டும் கடுமையாக எதிர்த்தது.
இந்நிலையில், சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் ஹோட்டலில் நேற்று, வேட்பாளர்கள் அறிமுக நிகழ்ச்சிக்கு த.வெ.க., ஏற்பாடு செய்தது. அதேபோல், சென்னையில் விஜய் போட்டியிடும் பெரம்பூர் தொகுதியில், அவரது பிரசாரத்தை இன்று துவக்கவும் திட்டமிடப்பட்டது.
ஆனால், தேர்தல் கமிஷன் அனுமதி கிடைக்காததால் த.வெ.க., வேட்பாளர் பட்டியல் வெளியீடு, நாளைக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
த.வெ.க., நிர்வாகிகள் கூறியதாவது: சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் உள்ள தனியார் ஹோட்டலில் த.வெ.க., வேட்பாளர் பட்டியல் வெளியீடு நிகழ்ச்சி நடத்த நேற்று ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால், 48 மணி நேரத்துக்கு முன்பாக, தேர்தல் நடத்தும் அதிகாரிகளிடம் அனுமதி பெற வேண்டும் என்பது எங்களுக்கு தெரியாது.
இதனால், ஏற்பாடு நடத்தும் இடத்துக்கு வந்த அதிகாரிகள், 'அனுமதி இல்லாமல் நிகழ்ச்சி நடத்தினால், ஹோட்டலை சீல் வைத்து விடுவோம்' என சொல்லி விட்டனர்.
இதையடுத்து, நுங்கம்பாக்கம் ஹோட்டலில் ஏற்பாடு செய்ய, அதிகாரிகளிடம் அனுமதி கோரப்பட்டது. ஆனால், காவல் துறை தடையில்லா சான்றிதழ் தர தாமதமாகி விட்டது. இதனால், நேற்று நிகழ்ச்சி நடத்தவில்லை.
இப்போது, நாளை நிகழ்ச்சி தேதி நடத்த அனுமதி வாங்கியுள்ளோம். அதன்படி, அன்றைய தினம் வேட்பாளர் பட்டியல் வெளியாகும்.
பெரம்பூரில் விஜய் பிரசார திட்டத்துக்கு, 25ம் தேதியே தேர்தல் கமிஷனிடம் மனு அளிக்கப்பட்டுவிட்டது. 3,000 பேருக்கு மேல் அந்த இடத்தில் நிற்க முடியாது என, அதிகாரிகள் அனுமதி மறுத்து விட்டனர். இதனால், அண்ணா நகர், வில்லிவாக்கம், விருகம்பாக்கம் ஆகிய தொகுதிகளிலும் விஜயால் பிரசாரம் செய்ய முடியவில்லை. இவ்வாறு அவர்கள் கூறினர்.
Advertisement
I think vijay party preparing for 2031 elections. Best of luck.
காருக்குள்ள பாத்தியா , எம்ஜியாரை பாத்தியா , சிவாஜியை பாத்தியா , காமராஜை பாத்தியா , காந்திய பாத்தியா , அண்ணாதுரை பாத்தியா , ரஜினியை பாத்தியா கமலஹாசனை பாத்தியா , பாரதிராஜா பாத்தியா விஜயகாந்த பாத்தியா விஜய பாத்தியா . . . இப்டி ஓட்டு கேட்டு வருவாங்கண்ணே ,
நெறிமுறைகள் நீதிமன்றத்தின் தேவைப்படிதான் உண்டாக்கப்பட்டது. எல்லா கடசிகளுடனும் பேசி முடிவானது. எனவே இது த வெ க வுக்கு ஆத்திரம் என்பது வடிகட்டிய பொய் . 48 மணி நேரத்திற்கு முன் கேட்டிருக்க வேண்டும். மேலும் அந்த அப்களில் அங்கு ஒரு விபத்து நடந்திருந்தால், நிச்சயம் நுமதி மறுக்கப்படும் என்பதும் உண்மை தானே. கோவிலுக்கு அருகில் மரணம் அடைந்தாள் பூஜைகள் கூட நிறுத்திவைக்கப்படும். சரி, இதற்கும் பட்டியல் வெளியிடுவதற்கும் நேரடியாக என்ன தொடர்பு? பனையூரிலிருந்தே பத்திரிகையாளர்களைக் கூப்பிட்டு வெளியிடலாமே . நான் யாருக்கும் கட்டுப்படாதவன் என்ற மன நிலைக்கு வைத்தியம் இல்லை.
கூட்டம் நடத்த ஒரு சில இடங்கள் அனைத்து கட்சி கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் அவர்களால் ஆலோசிக்கப்பட்டு தேர்ந்து எடுத்து அறிவிக்கப்பட்டுள்ளது. முன்கூட்டியே கட்சிகள் நாள் நேரம் இடம் கேட்டு அனுமதி பெற வேண்டும். முதலில் விண்ணப்பிப்பவர்களுக்கு அந்த நேரம் அனுமதி தரப்படும். இந்த கூட்டத்தில் தவெக கட்சியினரும் கலந்து கொண்டனர். இப்படி இருக்க தலைமை தூங்கிவிட்டு மற்றவர்கள் மீது பழி போடக்கூடாது

பிணம் விழுந்தால் பின்னங்கால் பிடதியில் பட நீங்கள் ஓடி ஒளிந்து விடுவீர்கள். கஷ்டம் மற்றவர்களுக்குத்தான்.