'கழுதை மேய்ப்பது அரசு வேலை'
சேலம் மாவட்டம் ஆத்துாரில் நடந்த பிரசாரத்தில், நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியதாவது:
பாலாற்றில், பல தடுப்பணைகளை ஆந்திரா கட்டியுள்ளது. தமிழக ஆறுகளில் அப்படி இல்லை. அணிலுக்கும் கூட, தண்ணீரை நாம் தான் போராடி பெற்றுத்தர வேண்டியுள்ளது.
கழுதைப்பாலில் உள்ள பால் கட்டி, கிலோ 5,000 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. எனவே, கழுதை மேய்க்கும் தொழிலும் அரசு வேலையாக அறிவிக்கப்படும்.
தமிழகத்தில், 10 லட்சம் கோடி ரூபாய் கடன் வாங்கி வைத்துக்கொண்டு, இலவசம் அறிவித்துக்கொண்டிருக்கிறார்ள். தி.மு.க., - அ.தி.மு.க.,விற்கு ஓட்டு போட்டால், சாராய ஆலை அதிபர்கள் தான் ஆட்சியாளராக இருப்பர். இவ்வாறு அவர் பேசினார்.
Advertisement
தொல்லை தாங்கமுடியல சாமி .... இதெல்லாம் நிப்பாட்டுங்களப்பா.... பேசாம ஒரு படத்துக்கு வசனம் எழுத சொல்லுங்கப்பா... ரொம்ப படுத்தாதீங்கப்பா.....இல்ல சொல்லுங்க நாங்க எல்லோரும் சோமாலியா போயிவிடுகிறோம்..........
கழுதைகள் வாக்களித்து தேர்வாகிய கழுதைகள் வாக்களித்த கழுதைகளை கட்டி மேய்ப்பதுதான் ஜனநாயகம்.
காக்காய் வளர்ப்பவர்களுக்கு அரசு வேலை. காக்காய் முட்டை கிலோ 7000/- சீமானின் சிந்தனையோ சிந்தனை...
அரசு வேலையில் குறைந்தபட்சம் சம்பளம் எவ்வளவு என்று அதையும் சொல்ல வேண்டும். மாதம் 3000 சம்பளம் அரசு வேலை என்றால் யாரும் அரசு வேலைக்கு சேர மாட்டார்கள். எல்லாம் ஏமாற்றும் வேலை.
அப்படீன்னா தமிழ்நாட்டில் உள்ள கழுதைகள் அனைத்தும் அரசுடைமையாக்கப்பட்டு விடுமா?
சீமான் சொல்ல வருவது என்ன வென்றால் எல்லாருக்கும் அரசு வேலை இட் துறையில் வேலை கிடைக்காது சிலர் விவசாயம் போன்ற துறையும் செய்ய வேண்டும்

எல்லாம் ஆமையில் ஆரம்பிச்சது.