கோல்கட்டா : மேற்கு வங்கத்தில், 'ஜெய் ஸ்ரீராம்' கோஷம் எடுபடாது, எங்களது கோஷம் 'ஜெய் காளி' என்று வங்கத்தின் கோஷத்தை முன்வைத்தார் அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி. இது தேர்தலின் போது பலத்த சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், தேர்தலுக்கு பின்னரும் 'ஜெய் ஸ்ரீராம்' கோஷத்தை முன்வைத்து போராட்டங்கள் தொடர்கின்றன.
தடியடி ;
ஜெய் ஸ்ரீராம் கோஷங்கள் திரிணாமுல் காங்கிரஸின் கட்சி கூட்டத்தில் மீண்டும் ஒலித்தன. பாராக்பூர் தொகுதியில் காஞ்சாப்பாரா பகுதியில் மம்தா பானர்ஜி அரசின் மூன்று அமைச்சர்கள் நடத்திய கட்சி கூட்டத்தில் சுமார் 200 அடி தூரம் தள்ளி ஜெய் ஸ்ரீ ராம் கோஷம் எழுப்பப்பட்டது. காவல்துறையினர் தடியடி நடத்தி கூட்டத்தைக் கலைத்தனர்.
ரயில் மறியல் ;
அமைச்சர்கள் ஜோதிப்ரியோ மல்லிக் மற்றும் தபோச் ராய் ஆகியோர் அந்த இடத்தை விட்டு அகன்றதும் பா.ஜ., ஆதாரவாளர்கள் 15 நிமிடங்கள் காஞ்சாப்பாரா ரயில் நிலையத்தில் ரயில்களை தடுத்தனர். சுமார் 4 மணியளவில் பா.ஜ., தொழிலாளர்கள் காவல் நிலையத்திற்கு வெளியே தர்ணாவில் ஈடுபட்டனர். இந்த தர்ணாவில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ.,க்களும் இணைந்தனர்.
10 லட்சம் தபால் :
இதனிடையே, முதல்வர் மம்தா பானர்ஜி இல்லத்திற்கு ஜெய் ஸ்ரீராம் என எழுதப்பட்ட 10 லட்சம் தபால் அட்டைகளை அனுப்ப உள்ளோம். மக்கள் திரிணாமுல் காங்கிரசை தோற்கடித்ததால் அவர்கள் மோசமாக நடந்துகொள்கிறார்கள். கோஷம் போடும் தொண்டர்களை அவர்கள் போலீஸ் மூலம் அடிக்கிறார்கள்,'' என பா.ஜ.,வினர் தெரிவித்துள்ளனர்..
திரிணாமூல் காங்கிரஸ் தலைவரான மம்தா பானர்ஜி “ஜெய் ஸ்ரீ ராம்” என்ற கோஷத்திற்கு எதிரிப்பு தெரிவித்தார். பா.ஜ.,வினர், அவர் எங்கு சென்றாலும் ஜெய் ஸ்ரீராம் கோஷத்தை எழுப்பி தங்கள் எதிர்ப்பினை தெரிவித்தபடியே இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
வாசகர் கருத்து