வேலூர்: கூட்டணி அமைத்து போட்டியிடும் திமுக, அதிமுக, பாஜ.,வை விட அனைத்து தொகுதிகளிலும் தனித்து நிற்கும் நாங்கள் தான் பெரிய கட்சி என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியுள்ளார்.
வேலூரில் பிரசாரத்தில் ஈடுபட்ட சீமான் பேசியதாவது: நாங்கள் ஆள் மாற்றம், ஆட்சி மாற்றத்திற்கு வந்தவர்கள் அல்ல, அடிப்படை அரசியல் மாற்றத்திற்கு வந்தவர்கள்.புதியதொரு தேசம் செய்வோம், மக்கள் புரட்சியில் அதை உறுதி செய்வோம் என்ற முழக்கத்தை முன்னெடுத்துள்ளோம். நம் நாட்டில் கல்வி, மருத்துவம், தண்ணீர் போன்ற அவசியமானவற்றை மிகப்பெரிய வியாபாரமாக மாற்றியுள்ளனர். உணவு பொருட்களை அத்தியாவசிய பொருட்களில் இருந்து நீக்கி, அதனை பதுக்கி வைக்க மத்திய அரசு வழிசெய்கிறது. வேளாண் தொழிலை அரசுப்பணியாக மாற்றிடுவோம். எங்களின் வெற்றி, தமிழர்களின் ஜனநாயகத்தின் வெற்றி. இவ்வாறு அவர் பேசினார்.முன்னதாக ராணிப்பேட்டையில் நடந்த பிரசாரத்தின் போது சீமான் பேசியதாவது: அரசே மருத்துவமனை, கல்வி நிலையங்கள் வைத்திருந்தாலும், எந்த அமைச்சர்களும் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதில்லை, அரசு பள்ளியில் தங்கள் பிள்ளைகளை படிக்க வைப்பதில்லை. அதற்கு காரணம் தரம் இல்லாமை தான். நாங்கள் வாக்கு கேட்க வரவில்லை, எங்களின் தம்பிகளுக்கு வாழ்க்கையை தாருங்கள் என கேட்கிறோம். ஊழலற்ற, லஞ்சமற்ற, பசியற்ற நாடாக மாற்றுவேன், அனைவருக்கும் அரசு வேலை தருவேன். இது என் தாய், தமிழர்களின் மீது ஆணை.
இன்னும் இலவசம் கொடுப்பதாக கூறும் திமுக, அதிமுக கட்சிகள், மக்களை இன்னும் ஏழ்மை நிலையிலேயே வைத்திருப்பதையே உணர்த்துகிறது. பா.ஜ., உள்ளே வரக்கூடாது என்பவர்கள் திமுக.,விற்கு ஓட்டு போடுங்கள், சீமான் இருக்கும் வரை அது நடக்காது என்பவர்கள் எங்களுக்கு ஓட்டு போடுங்கள். கூட்டணி அமைத்து போட்டியிடும் திமுக, அதிமுக, பா.ஜ., போன்ற கட்சிகளை விட 234 தொகுதிகளிலும் தனித்து நிற்கும் நாங்கள் தான் பெரிய கட்சி. அரசியல்வாதிகளுக்கு தேர்வு வைத்து அதில் தேர்ச்சி பெறுபவர்களே எம்எல்ஏ.,வாக வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
தனித்து நிற்கும் நாங்கள் தான் பெரிய கட்சி: சீமான்
"நாடு" என்கிற வார்த்தையை அடிக்கடி உபயோகிக்கிறார். "தமிழகம்", இல்லை "மாநிலம்" என்கிற வார்த்தை எங்கும் இல்லை. மத்திய அரசு இயற்றிய சட்டத்தை மீறி மாநில அரசு ஒன்றும் செய்ய முடியாது. வேளாண் சட்டம் விவசாயிகளை விடுதலை செய்துள்ள சட்டம். அதை ஏற்க மறுக்கிறார். தரத்தை எப்படி உயர்த்துவேன் என்று சொல்லவில்லை. எல்லாமே அரசாங்கம் எடுத்து நடத்தினால் அது எந்த விதத்திலும் உருப்படாது என்பதற்கு கம்யூனிஸ்டு ரஷ்யா, வெனிசுவேலா, கியூபா போன்ற பல நாடுகளை உதாரணமாகக் காட்டலாம். நம் நாடே 1990 இல் எல்லாம் அரசாங்கமே நடத்தி திவாலாகும் நிலைக்கு வந்திருந்தது. இந்திய நாட்டின் கட்டமைப்புக்குள் இருந்து கொண்டு அரசியல் அமைப்பை எப்படி மாற்ற முடியும்? தனி நாடு கனவு வைத்திருக்கிறாரா? இலங்கையிலேயே அந்த கனவு நடக்கவில்லை. இந்தியாவை எதிர்த்து என்ன மாதிரி புரட்சி செய்வார்? உள்ளே தள்ளுவார்கள். இவரது கட்சி வேட்பாளர்களின் பெயரைப் பார்த்தேன். பல கிறித்துவர்கள். நாம் தமிழரா? நாம் கிறித்துவரா? இவர் கட்சி பல தொகுதிகளில் செயிக்கலாம். அது திராவிட கட்சிகளின் மீது ஏற்பட்ட வெறுப்பினால் உண்டானது. ஆனால் அதற்கு பிறகு மீண்டும் பழைய குருடி கதவைத் திரடி மாதிரிதான் ஆகும். இவரும் பெரிய பொற்காலத்தை உண்டாக்கப் போவதில்லை. எல்லோரையும் பகைத்துக்கொண்டால் திருவோடுதான் கடைசியில் மிஞ்சும். இந்த தேர்தலில் இவர் வந்து போகலாம். அடுத்த ஐந்து வருடங்களில் இவர், கமல் போன்றவர்களின் கட்சி நிலைக்குமா என்று தெரியாது. ஒரு ஆளின் பெயர் வைத்து நடத்தும் கட்சிகள் நிலைக்க முடியாது.
சீமானின் கனவே தமிழ்நாடு இந்திய தேசத்தில் இருந்து தனிநாடாக வைப்பதுதான். இதை பலமுறை சொல்லிவிட்டார் அதனால்தான் இவரை தீவிரவாதி என்று சொல்கிறோம்.இப்போ செய்யும் சத்தியம் தமிழ்நாட்டுமக்களை சூறையாடவா? இவரின் கட்சி உருவானதே இந்த தமிழ்நாட்டை முதலில் கிறிஸ்துவ நாடாக மாற்றவேண்டும் என்பதுதான் . இதன்மூலம்தான் இவருக்கு பணம் கொட்டுகிறது . இப்போ இவர் அறிவித்திருக்கும் வேட்பாளர்களின் மூலம் அதை நிறைவு செய்திருக்கிறார் ....
இன்றய சூழ்நிலையில போராட்டம், புரட்சி, பூசணிக்காய் என்று பேசுபவர்கள் நாட்டிற்கே அபாயமானவர்கள். இன்றில்லையேல் நாளை அது சிக்கலில் முடியும். சீமானிற்கு மாநிலத்திற்கு தேவையான தெளிவான தொலைநோக்கு பார்வை இல்லை. சினிமாவில் வரும் வசனங்கள் நிஜவாழ்கைக்கு சரிப்படப் போவதில்லை. அன்று கடவுள் இல்லையென்றார், ஹிந்து கடவுளை மிகவும் தரம் தாழ்ந்து பேசினார், பிறகு முருகன் என்ற கடவுளை அவரே உற்பத்தி செய்து எங்கள் பாட்டன் என்கிறார். கிருஷ்ணரை நம்ம பய, சிவபெருமான் நம்மாளு என்றார். பிரசவத்தை வீட்டிலேயே பார்க்கலாம் என்று கிளப்பிவிட்டு அவரது மனைவிக்கு பிரசவத்தை பிரைவேட் ஆஸ்பத்திரியில் பார்த்தார். இன்று உயிரோடில்லாதவர்களை தனது நீண்டகால நண்பர் என்பார். எல்லாம் அரசியலுக்காக மட்டுமே. கள் இறக்குதல், நுங்கு எடுத்தல், விவசாயம் செய்தல் மட்டுமே இன்று நாட்டை முன்னேற்ற வைக்காது. விவசாயம் நாட்டின் ஓர் முக்கிய அங்கம். ஆனால் அது மட்டுமே நாட்டை உலகில் முன்னேற்ற உதவும் என்பது முற்றிலும் தவறு. இவர் ஆட்ச்சிக்கு வந்தால், இலங்கையுடன் அடிதடி நடத்தவும், மத்திய அரசுடன் முட்டிக்கொள்ளவும் போராட்டம் புரட்சி செய்யவும் நேரம் சரியாக இருக்கும். சிறிது காலம் சென்றபின் ஒரு கதையை சொல்லி தனி தமிழ்நாடு என்று ஆரம்பிப்பார். மக்கள் தொலை நோக்கு பார்வையுடன் சிந்தித்தால் தான் உண்டு.
சீமான் சொல்வது 100% கரெக்ட்.. தேசிய கட்சிகள,பாரம்பரிய தேசிய கட்சிகள் எல்லாம் தனியே நிற்க பயந்து,நடுங்கி,இரண்டு பெரிய கட்சிகளின் கால்களில் விழுந்து எட்டி உதைத்தாலும் ,நீங்கள் தான் கதி என்று போய் விழும் இந்த கால கட்டத்தில்,பல.வருடங்களாக இரண்டு திராவிட கட்சிகளுடன் செல்லமாட்டேன் என்ற கொள்கையில்.இன்றுவரை தோற்றாலும் பரவாயில்லை என்று வுறுதியுடன் இருக்கும் அவரது துணிவான செயல் பாராட்ட படவேண்டியது. போற்றுதலுக்குரியது.தமிழ் நாட்டில்.இது வரை புதிய கட்சி கள் தொடங்கிய எல்லோருமே. ( இவரை தவிர )இரண்டு கட்சிகளிடம் சரண்டர் ஆனதால் ,மேலே வர முடியாமல் ,விடவும் முடியாமல் திண்டாடி கொண்டிருக்கிறார்கள்.இதில் சீமான் தப்பித்து விட்டார் என்றே சொல்லலாம்.எதற்கும் அடி பணியவில்லை
திராவிஷ கிருமி - ராமசாமிநாயக்கன்பாளையம் ,இந்தியா
12-மார்-2021 11:58 Report Abuse
வக்கீல் வண்டுமுருகன் - Phoenix, Arizona,யூ.எஸ்.ஏ
12-மார்-2021 09:06 Report Abuse
Rajagopal - Los Angeles,யூ.எஸ்.ஏ
12-மார்-2021 02:58 Report Abuse

Narayanan - chennai,இந்தியா
12-மார்-2021 13:05Report Abuse

raskoolu - Madurai,இந்தியா
12-மார்-2021 02:32 Report Abuse

Henry baskar - penang,மலேஷியா
12-மார்-2021 07:45Report Abuse
P. Siresh - Chennai,இந்தியா
12-மார்-2021 00:28 Report Abuse

Siva - Aruvankadu,இந்தியா
11-மார்-2021 23:44 Report Abuse
Naduvar - Toronto,கனடா
11-மார்-2021 23:07 Report Abuse
11-மார்-2021 22:05 Report Abuse
mindum vasantham - madurai,இந்தியா
11-மார்-2021 21:58 Report Abuse
மேலும் 35 கருத்துக்கள்...